வலங்கைமான் வட்டம் ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத அபயவரதராஜப் பெருமாள், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதேபோல், திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர், நீடாமங்கலம் சந்தானராமர் கோயில், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் உள்ளிட்ட கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.