செம்போடை ஆர்.வி. கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த செம்போடை ஆர்.வி. பல்தொழில்நுட்பக் கல்லூரியில் சென்னை பிரேக்ஸ் இந்தியா

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த செம்போடை ஆர்.வி. பல்தொழில்நுட்பக் கல்லூரியில் சென்னை பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் நிறுவனர் டாக்டர் ஆர். வரதராஜன் முன்னிலையில் நடைபெற்ற முகாமில், பிரேக்ஸ் இந்தியா நிறுவன துணைத் தலைவர் ஷியாம்சுந்தர், மேலாளர் ரவிச்சந்திரன், உதவி அதிகாரி சங்கர், பயிற்சி அலுவலர் கிரிஸ்டோபர் ரூபன் உள்ளிட்டோர் மாணவர்களைத் தேர்வு செய்தனர்.
முகாமில் ஆர்.வி. கல்லூரி மற்றும் இ.ஜி.எஸ். பிள்ளை பல்தொழில்நுட்பக் கல்லூரி, சர்ஐசக் நியூட்டன் கல்லூரி, கொருக்கை அரசினர் பல்தொழில்நுட்பக் கல்லூரி, ஏ.ஆர்.ஜே. கல்லூரிகளைச் சேர்ந்த 150 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் தேர்வான ஆர்.வி. கல்லூரி மாணவர்கள் 50 பேர் உள்பட 75 பேருக்கு பணி ஆணைகள் அளிக்கப்பட்டன.
ஆர்.வி. கல்லூரியின் செயலர் செந்தில், முதல்வர் சந்திரசூடன், ஆர்.வி. பொறியியல் கல்லூரி முதல்வர் பாலமுருகன், ஆர்.வி. ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர் பக்கிரிசாமி உள்ளிட்டோர் தேர்வான மாணவ, மாணவியரை பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com