ஜன. 20 -இல் குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம் ஜன. 20 -ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம் ஜன. 20 -ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம், வட்டத்துக்கு ஒரு கிராமம் வீதம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் ஜன. 20 -ஆம் தேதி நடைபெறுகிறது. தொடர்புடைய ஊராட்சி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை இக்கூட்டம் நடைபெறும்.
நியாயவிலைக் கடைகள் தொடர்பான புகார்கள், குடும்ப அட்டையில் பெயர் நீக்குதல், சேர்த்தல், முகவரி மாற்றம் மற்றும் கடை மாற்றம் கோருதல், புதிய குடும்ப அட்டை கோருதல் உள்ளிட்டவைகளுக்கு இந்தக் கூட்டத்தில் மனு அளித்துத் தீர்வுப் பெறலாம்.
வட்டம் - ஊராட்சி என்ற அடிப்படையில், கூட்டம் நடைபெறும் ஊராட்சிகளின் விவரம் :
நாகப்பட்டினம் - தெற்குபொய்கைநல்லூர், கீழ்வேளூர் - திருக்கண்ணங்குடி, திருக்குவளை - அணக்குடி, வேதாரண்யம் - தாணிக்கோட்டகம், மயிலாடுதுறை - பாண்டூர், தரங்கம்பாடி - முடிதிருச்சம்பள்ளி, சீர்காழி - நாயக்கர்குப்பம், குத்தாலம் - திருமணஞ்சேரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com