தமிழர் திருநாள் வாழ்த்துகள்: மனிதநேய ஜனநாயகக் கட்சி

தமிழர் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம். தமிமுன்

தமிழர் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம். தமிமுன் அன்சாரி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி :
பசும் வயல்கள் சூழ்ந்த மருத நிலத்தை பெருபான்மையாகக் கொண்டது நமது தமிழ்நாடு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்' என திருவள்ளுவர் வேளாண்மையைப் போற்றியுள்ளார்.
விவசாயத்தை செம்மைப்படுத்தும் மண், மழை, கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தொன்மைக் காலத்தில் தமிழர்கள் முன்னெடுத்த நாகரீகம் தான் பொங்கல் திருநாள் எனவும், தமிழர் திருநாள் எனவும் கொண்டாடப்படுகிறது. இத்திருநாளுக்கு அறுவடைத் திருநாள் என்ற பெயரும் விளங்கியுள்ளது.
தமிழர் பண்பாடுகளை எடுத்துரைக்கும் இத்திருநாளில் இயற்கை முறை வேளாண்மையை வளர்க்கவும், தண்ணீர் மேலாண்மையை ஒழுங்குபடுத்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உறுதி ஏற்போம். தமிழர் திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com