நாங்கூர் வைகுந்தநாதப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

சீர்காழியை அடுத்த திருநாங்கூர் வைகுந்தநாதப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

சீர்காழியை அடுத்த திருநாங்கூர் வைகுந்தநாதப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
திருநாங்கூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைகுந்த விண்ணகரம் வைகுந்தநாதப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு வைகுந்தவள்ளி தாயாருடன் பெருமாள் காட்சி தருகிறார். இக்கோயிலில் மூலவர் வைகுண்டத்தில் இருப்பது போன்று மூலவர் பரமபதநாதர் காட்சி தருகிறார். பெருமாள் காலடியில் கருடன் அமர்ந்திருப்பது போன்று அருள்பாலிக்கிறார். இங்கு மார்கழி மாத நிறைவு மற்றும் கருட சேவை விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வைகுந்தநாதர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com