நாகை மாவட்டம், சந்திரப்பாடி ஊராட்சியில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனி வட்டாட்சியர் நாகலெட்சுமி தலைமை வகித்தார். இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முதியோர்களுக்கான ஓய்வூதியம், பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை அளித்தனர். முகாமில், வருவாய் ஆய்வாளர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், முக்கரும்பூர் ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு தேர்தல் துணை வட்டாட்சியர் விஜயராணி தலைமை வகித்தார். முக்கரும்பூர் ஊராட்சிக்குள்பட்ட பண்டாரவாடை, தென்பாதி, உக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு, பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில், கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரி, உதவியாளர் பக்கிரிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.