ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்  உருவப் படத்துக்கு புஷ்பாஞ்சலி

சித்தியடைந்த காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உருவப் படத்துக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சித்தியடைந்த காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உருவப் படத்துக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சி சங்கர மடத்தின் 69 -ஆவது பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த மாதம் 28 -ஆம் தேதி சித்தியடைந்தார். இதையொட்டி, ஸ்ரீ ஜயேந்திர  சரஸ்வதி சுவாமிளுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மயிலாடுதுறை காஞ்சி சங்கரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட நிலையில்  வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உருவப் படத்துக்கு, பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பக்தர்கள் திரளானோர் புஷ்பாஞ்சலி செலுத்தி, வழிபாடு செய்தனர். மேலும், ஸ்ரீ ஜயேந்திரரைப் போற்றி பஜனைகள் பாடப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். காஞ்சி வேத பாடசாலையின் நிர்வாகி பூம்புகார் சேகர், பள்ளி செயலர்  தியாகராஜன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ரமணி, வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், சிட்டி யூனியன் வங்கி துணைப் பொது மேலாளர் ராமசாமி, கிளை மேலாளர் சக்கரபாணி, மருத்துவர் ராமமூர்த்தி, சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் வெங்கட்ராமன், பதஞ்சலி யோகா மைய இயக்குநர் கணேசன், பள்ளி முதல்வர் வேம்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காஞ்சி சங்கரா மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர்  செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com