சமூக சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பெண்கள் முன்னேற்றத்துக்கு சிறப்பான சேவையாற்றிய பெண்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தமிழக அரசின் சிறந்த சமூக சேவைக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ

பெண்கள் முன்னேற்றத்துக்கு சிறப்பான சேவையாற்றிய பெண்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தமிழக அரசின் சிறந்த சமூக சேவைக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
பெண்ணின வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவையாற்றிய பெண்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு, தமிழக முதல்வர் சுதந்திர தின விழாவில் சமூக சேவை விருது வழங்கவுள்ளார். இந்த விருதுக்குத் தகுதியான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகிகள் நாகை மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் அணுகி, உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெற்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித்தனியே பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து 2 நகல்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு ஜூன் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com