நாகப்பட்டினம்
தாணிக்கோட்டகம் மாதா கோயிலில் தேர் பவனி
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் புனித லூர்து மாதா ஆலய ஆண்டு விழாவையொட்டி, திருத்தேர் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் புனித லூர்து மாதா ஆலய ஆண்டு விழாவையொட்டி, திருத்தேர் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
தாணிக்கோட்டகம் லூர்து மாதா ஆலய ஆண்டு விழா மே 18 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு நிகழ்ச்சியாக தேர் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 5 சப்பரங்களை பெண்களும், ஆண்களும் தூக்கிச் சென்றனர்.
தஞ்சை மறைமாவட்ட இளங்குரு மடத்தின் அதிபர் அகஸ்டின், பங்குத் தந்தைகள் ஆரோக்கியநாதன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்றனர்.