பொறையாறு பகுதியில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட பொறையாறு, திருக்கடையூர், ஆக்கூர், செம்பனார்கோயில் பகுதியில் கஜா புயல் முன்னெச்சரிக்கையாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலும் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் வியாழக்கிழமை மாலை முதல் நிறுத்தப்பட்டது.