நாகை மாவட்டம், திருவெண்காடு அருகேயுள்ள நாங்கூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாங்கூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை தலைமையாசிரியர் குமார் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். அப்போது, மாணவர்கள் தங்களுடைய படைப்புகளை பற்றி அவரிடம் விளக்கிக் கூறினர். மேலும், தாங்கள் அதை கண்டறிந்த முறைகள் குறித்து விளக்கினர். பின்னர், கண்காட்சியில் இடம்பெற்ற சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. அப்போது, உதவி தலைமையாசிரியர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள்
உடனிருந்தனர்.