2 கோயில்களில் உண்டியலை உடைத்து திருட்டு

நாகை மாவட்டம், சீர்காழி அருகே 2 கோயில்களின் உண்டியல்களை எடுத்துச் சென்று, அதிலிருந்த

நாகை மாவட்டம், சீர்காழி அருகே 2 கோயில்களின் உண்டியல்களை எடுத்துச் சென்று, அதிலிருந்த பணத்தைத் திருடிவிட்டு, உண்டியலை முள்புதருக்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கொள்ளையர்கள் வீசிச்சென்றனர். 
காவல்மானியம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி, ஜெயவீர ஆஞ்சநேயர் மற்றும் வெள்ளந்தாங்கி அம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. அருகருகே அமைந்துள்ள இந்தக் கோயில்களின் முன்பகுதியில் உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு இந்த கோயில்களின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், உண்டியல்களை எடுத்துக் கொண்டு வெளியேறினர்.
மேலும், அவற்றில் இருந்த ரூ.25 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, 2 சில்வர் உண்டியல்களையும் கோயிலிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரமுள்ள முள்புதருக்குள் வீசிவிட்டு, தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து கொள்ளிடம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com