நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் "சபரியைக் காப்போம்' என்ற கோரிக்கையை முன்வைத்து சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சனிக்கிழமை பேரணி நடத்தி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து, பேரணியாக வட்டாட்சியர் அலுவலகத்தை சென்றடைந்த ஐயப்ப பக்தர்கள், ஆகம விஷயத்தில் நல்ல தீர்வை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பேரணியில், 2 பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.