நாகை மாவட்டம், பொறையாறில் உள்ள தரங்கம்பாடி பேரூராட்சி சமுதாயக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தின் சார்பில், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பூம்புகார் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் தலைமை வகித்து, 150 கர்ப்பிணிகளுக்கு மாலையணிவித்து, மங்கலப் பொருள்கள் மற்றும் வினா- விடை போட்டியில் வெற்றி பெற்ற கர்ப்பிணிகளுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கினார். பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார்.
செம்பனார்கோவில் சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன், சீனிவாசபெருமாள், கிராம சுகாதார செவிலியர் தனலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலக மேற்பார்வையாளர் சகுந்தலா வரவேற்றார். அங்கான்வாடி பணியாளர் சகிலாபானு நன்றி கூறினார்.
கொள்ளிடத்தில்...
சீர்காழி, செப். 14: கொள்ளிடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 80 கர்ப்பிணிகளுக்கு சேலை மற்றும் சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.
கொள்ளிடம் சமுதாய சேவை மையத்தில் மாவட்ட சமுக நலத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமூக வளைகாப்பு விழாவை நடத்தியது. சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி தலைமையில் நடைபெற்ற விழாவில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ம.சக்தி, கொள்ளிடம் ஒன்றிய அதிமுக செயலர் கே.எம். நற்குணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில்,
80 கர்ப்பிணிகளுக்கு சேலை மற்றும் சீர் வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடைபெற்றது.