குறுவட்ட விளையாட்டுப் போட்டி

குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. 

குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. 
சீர்கீழ் விவேகானந்தா பள்ளியில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான குழு மற்றும் தடகளப் போட்டியில் தாலுக்கா அளவில் உள்ள அரசு, அரசு உதவிப் பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 7-ஆம் வகுப்பு மாணவர் சித்தார்த் 100,200 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம், நீளம் தாண்டுதலில் 3-ஆம் இடம் 8-ஆம் வகுப்பு மாணவர் திரோஷன் 400 மீட்டரில் 2-ஆம் இடம், முகம்மது இம்தியாஸ் குண்டு எறிதலில் முதலிடம், வட்டு எறிதலில் 2-ஆம் இடம், பரத் உயரம் தாண்டுதலில் 2-ஆம் இடம், ஹரிபிரசாத் வட்டு எறிதலில் 3-ஆம் இடம், 400 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும் பெற்றனர். இதேபோல், மேலோர் பிரிவில் மாணவர் கிரிஷ் 100, 200 மீட்டரில் முதலிடம், கதிரவன் 200,  400மீட்டரில் முதலிடம், வேகாஸ் 400 மீட்டரில் மூன்றாமிடம், ரமீன்தரன் குண்டு எறிதலில் 3-ஆம் இடம், கோகுல் நீளம் தாண்டுதல் 3-ஆம் இடம், ஈட்டி எறிதலில் ஆகாஷ் 3-ஆம் இடம், 400 மீட்டர் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். இதேபோல், மேன்மேலோர் பிரிவில் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். 
குழுபோட்டியில் ஆண்கள் பிரிவில் கால்பந்து வளைகோல் பந்து போட்டியில் முதலிடமும், இறகுப் பந்து போட்டியில் முதலிடமும், பெண்கள் வளைகோல் ஆட்டத்தில் மேலோர், மேன்மேலர் பிரிவில் முதலிடமும் பெற்று அதிக புள்ளிகள் பெற்று இப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், ஊக்கமளித்த உடற்கல்வி இயக்குநர் ரமேஷ், நெடுமாறன், சசிகுமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளித் தாளாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com