திருவாவடுதுறை ஆதீனத்தில்  விநாயகர் சதுர்த்தி விழா

திருவாவடுதுறை ஆதீனத்தில் வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. 

திருவாவடுதுறை ஆதீனத்தில் வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. 
விழாவில், கிரிவலம் வந்த நல்லூர் நம்பியாரூரர் சிவனடியார் திருக்கூட்டம் தயாரித்து அளித்த சிவஞானக்களிறு எனும் விழா மலரை திருவாவடுதுறை ஆதீன 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் வெளியிட, அதன் முதல் பிரதியை கிரிவலம் வந்த நல்லூர் இசக்கிராஜ்  பெற்று கொண்டார்.
தொடர்ந்து, ஆதீனப் பணியாளர்களின் குழந்தைகள் 100 பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம்  ரூ. 2 லட்சம் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பிரசாதம் வழங்கினார். இதில், ஆதீன கல்வி நிலைய ஆசிரியர்கள் மற்றும் சைவ சித்தாந்த பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com