அண்ணா பிறந்த நாள் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள அண்ணா


மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள அண்ணா சிலைகளுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திமுக சார்பில் நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் என். கெளதமன், பாரதி மார்க்கெட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்ட திமுக அலுவலகத்திலிருந்து பாரதி மார்க்கெட் வரை திமுகவினர் ஊர்வலமாக வந்தனர்.
நாகை பாரதி மார்க்கெட் அருகே உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் சிக்கல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் தங்க. கதிரவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியின் நகர அவைத் தலைவர் அறிவழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர். சந்திரமோகன், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர்மன்ற முன்னாள் தலைவர் மஞ்சுளா சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல், நாகையை அடுத்த புத்தூரில் உள்ள அண்ணா சிலைக்கும், பிற பகுதிகளில் உள்ள அண்ணா சிலைகளுக்கும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருமருகல்... திருமருகல் சந்தைப் பேட்டை பகுதியில் அதிமுக ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில், அண்ணா உருவப்படத்துக்கு அக்கட்சியினர் மலர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில், அதிமுக ஊராட்சிச் செயலாளர் மரவாடி சேகர், கிளைச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
சீர்காழி... சீர்காழி புதிய பேருந்துநிலையம் எதிரே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்துக்கு அமமுக நகரச் செயலாளர் ஏ.கே. சுரேஷ் தலைமையில், மாவட்ட அவைத்தலைவர் என். சந்திரமோகன், ஒன்றியச் செயலாளர் பொற்செழியன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல், உழவர் சந்தை அருகே நகர அதிமுக சார்பில், நகர செயலாளர் அ. பக்கிரிசாமி தலைமையில் அண்ணா பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடை
பெற்றது.
வைத்தீஸ்வரன்கோயிலில் திமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் செயலாளர் அன்புச்செழியன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர், மாவட்ட பிரதிநிதி சுவாமிநாதன் ஆகியோர் அண்ணா உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
செம்பனார்கோவில்... செம்பனார்கோவில் கடைவீதியில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ எம். சித்திக், வடக்கு ஒன்றியச் செயலாளர் அன்பழகன், தெற்கு ஒன்றியச் செயலாளர் அப்துல் மாலிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், அதிமுக சார்பில் அண்ணாவின் உருவப்படத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், முன்னாள் எம்.எல்.ஏ. ரெங்கநாதன், ஒன்றிய அவைத்தலைவர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com