திருவாலியில் சமுதாய வளைகாப்பு

திருவெண்காடு அருகே உள்ள திருவாலியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை


திருவெண்காடு அருகே உள்ள திருவாலியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு எம்எல்ஏ பி.வி. பாரதி தலைமை வகித்தார். செம்மங்குடி கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜமாணிக்கம், வைத்தீஸ்வரன்கோயில் கூட்டுறவு வங்கித் தலைவர் போகர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி பணியாளர் சுதா வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ பி.வி. பாரதி, கர்ப்பிணிகளுக்கு தாம்பூலத் தட்டுகள் வழங்கி, பெண்கள் நலனுக்காக தமிழக அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்துப் பேசினார். நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டன.
இதில் முன்னாள் எம்எல்ஏ சக்தி, அதிமுக ஒன்றிய இளைஞரணி செயலாளர் திருமாறன், ஊராட்சி செயலாளர்கள் பரசுராமன், மாமல்லன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் சாவித்திரி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com