குத்தாலம் வட்டம், பெருஞ்சேரியில் 5 மகளிர் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
பெருஞ்சேரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள 5 மகளிர் குழுக்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வீதம் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. சங்கத் தலைவர் வி.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சங்கச் செயலர் சி. முருகன் பேசும்போது, கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் கடன் சங்கத்தின் வழியாக 5 குழுக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மேலும் சில குழுக்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளதால், உறுப்பினர்கள் கடன் சங்கத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்றார்.
நிகழ்ச்சியில், கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி கள மேலாளர் மோகன், கள அலுவலர் (குத்தாலம்) வெங்கடேசன், சங்கத் துணைத் தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் மகளிர் குழுக்களுக்கு நிதியுதவி வழங்கினர்.