கோடைக்கால விளையாட்டு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாம் மற்றும் நீச்சல் பயிற்சியில் சேர விரும்புவோர்

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாம் மற்றும் நீச்சல் பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருவாரூர் மாவட்ட பிரிவின் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 16 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவியருக்கான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.26-ஆம் தேதி முதல் திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில் தொடங்க உள்ளது.
21 நாள்கள் நடைபெறவுள்ள இம்முகாம் காலை 6.30 முதல் 8.30 மணி,  மாலை 4 முதல் 6  மணி வரை நடைபெறும். இதில் தடகளம், கால்பந்து, வாலிபால், ஹாக்கி மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் பயிற்சியாளர்களைக் கொண்டு, பயிற்சியளிக்கப்படும்.
நீச்சல் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் 12 நாள்கள் பயிற்சி வகுப்பில் சேர ரூ.500 கட்ட ணம் செலுத்தி நீச்சல் கற்றுக்கொள்ளலாம். நீச்சல் தெரிந்த மாணவ, மாணவியர் மற்றும்  பொதுமக்கள் 1 மணி நேர கட்டணத் தொகையைச் செலுத்தி நீச்சல் குளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். முகாமில் பங்கேற்க விரும்புவோர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 04366-227158 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com