அடிப்படை வசதி கோரி சாலை மறியல்

அடிப்படை வசதி செய்து தரக் கோரி  பூசலாங்குடி  மக்கள்  வியாழக்கிழமை விளக்குடி கடைத்தெருவில் சாலை மறியல் செய்தனர்.

அடிப்படை வசதி செய்து தரக் கோரி  பூசலாங்குடி  மக்கள்  வியாழக்கிழமை விளக்குடி கடைத்தெருவில் சாலை மறியல் செய்தனர்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பூசலாங்குடி ஊராட்சியில் குடிதண்ணீர் பற்றாக்குறையாக உள்ளதாலும்,  தெருவிளக்கை சரிசெய்யக்கோரியும்  ஊராட்சி நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்தும் பூசலாங்குடி ஊராட்சி பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சியை சார்ந்தவர்களும் விளக்குடி கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து  காவல்துணைகண்காணிப்பாளர்  ஜெபராஜ்,  இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்  உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் சாலைமறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com