திருவாரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேரணி

திருவாரூரில்  நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் பங்கேற்ற பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.  

திருவாரூரில்  நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் பங்கேற்ற பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.  
திருவாரூரில் சனிக்கிழமை (ஆக.19) நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், மாரத்தான் ஓட்டம், கிராமிய பாரம்பரிய விளையாட்டுகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 இதன் தொடர்ச்சியாக திருவாரூரில் வியாழக்கிழமை சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் பங்கேற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேரணி நடைபெற்றது.
தெற்குவீதியில் பேரணியை தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபால், திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் எஸ். கலியபெருமாள், நகரச் செயலர் ஆர்.டி. மூர்த்தி, அதிமுக மாவட்ட பொருளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com