மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மின்பாதுகாப்பு வகுப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு உதவி செயற்பொறியாளர் சா.சம்பத் தலைமை வகித்த்தார்.
இதில் சமீபத்திய மின்விபத்துகளும் அதன் காரணங்களும் அதை தடுக்கும் முறைகளும், மின்பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்தல், பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்துதல், மின்கம்பிகளை தொய்வின்றி அறுந்து போகாமல் பராமரித்தல், பழுதான மின் கம்பம், மின் கம்பிகளை மாற்றுதல், மின்பாதைகளில் உள்ள மரங்களை வெட்டுதல், மின்விபத்து குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை பற்றி வகுப்பு எடுக்கப்பட்டது. மின்துறை அலுவலர்கள், பணியாளர்கள், பொறியாளர்கள் மின்பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.