அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, திருவாரூர், மன்னார்குடியில் அவரது உருவப் படம் மற்றும் சிலைக்கு புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, திருவாரூர், மன்னார்குடியில் அவரது உருவப் படம் மற்றும் சிலைக்கு புதன்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருவாரூர் எல்ஐசி அலுவலகத்தில்அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் எல்ஐசி முதுநிலை கிளை மேலாளர் ராம்குமார், உதவி மேலாளர் மனோஜ்,  அலுவலர்கள் ஆனந்தன், இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மன்னார்குடியில்...
சட்டமேதை அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, மன்னார்குடியில் அவரது சிலைக்கு புதன்கிழமை அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், நடசேன் தெருவில் உள்ள அம்பேத்கர் அறிவாலயத்தில் அவரது சிலைக்கு மாவட்டச் செயலர் வி.த. செல்வம் தலைமையில், மாவட்ட பொருளாளர் வெற்றி, மாநில அரசியல் குழு உறுப்பினர் பார்வேந்தன், மாநில மாணவரணி துணைச் செயலர் ரமணி, நகரச் செயலர் அறிவுக்கொடி, மாவட்ட நிர்வாகி சுரேஷ் உள்ளிட்ட திரளானவர்கள் மாலை அணிவித்தனர். 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலர் வை. செல்வராஜ் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ். தங்கராஜ் தலைமையில், நகரச் செயலர் எஸ். ஆறுமுகம், சிஐடியு நகர நிர்வாகி ஜி. ரகுபதி உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், மாவட்டச் செயலர் இரா. தாமோதரன் தலைமையில் கிளைச் செயலர் யு.எஸ். பொன்முடி உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com