19-இல் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூரில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிச.19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருவாரூரில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிச.19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கூட்ட அரங்கில், டிச.19-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் சென்னை நிதித்துறை அரசு கூடுதல் செயலர் மற்றும் ஓய்வூதிய இயக்குநர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
 திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றிய மாநில அரசு  ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், ஓய்வூதியம் தொடர்பான குறைகள் இருந்தால், அது தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவாரூர் என்ற முகவரிக்கு டிச.15 க்குள் அனுப்ப வேண்டும்.
மனுக்களோடு இணைத்து அனுப்ப வேண்டியவை:  விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி (தொலைபேசி மற்றும் செல்லிடப்பேசி எண்ணுடன்),  ஓய்வூதியப் புத்தக எண், இறுதியாக பணிபுரிந்த அலுவலகம் மற்றும் பதவி, ஓய்வுபெற்ற நாள், ஓய்வூதியரின் கோரிக்கை, கோரிக்கை எந்த அலுவலரிடம் எவ்வளவு நாள்களாக நிலுவையில் உள்ளது, ஓய்வூதியம் பெறுபவராயின் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்களை இரண்டு பிரதிகளுடன் அனுப்ப வேண்டும். இவ்வாறு அனுப்பப்படும் மனுக்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், போக்குவரத்துக்கழகம் ஆகியவற்றில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள், தங்கள் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com