நீடாமங்கலத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, நீடாமங்கலம் பெரியார் சிலை பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கர் திருவுருவப் படத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நடேச. தமிழார்வன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் மணலி ஜி. நேதாஜி, ராதா, நகரச் செயலாளர் யு. சந்துரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.