வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் குருபகவானுக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சாகயேசுவரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், உத்ஸவர் குருதெட்சிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலெட்சுமி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மூலவர் குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.