மன்னார்குடி ஆதிபராசக்தி கல்வியியல் கழக, உயர்நிலைப்பள்ளியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஆதிபராசக்தி கல்வியியல் கழகத் தலைவர் பி.எஸ். வாசன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் இலக்குமி பங்காரு அடிகளார் கலந்துகொண்டு, ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டடப்பட்ட மூன்று வகுப்பறைகள் கொண்ட பங்காரு அடிகளார் பவளவிழா கட்டடத்தை திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து, நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் சைக்கிள், தையல் இயந்திரம் ஆகியவற்றை பயனாளிகளுக்கு அவர் வழங்கினார். அமைப்பின் மாவட்டச் செயலர் வி. முத்துவேல் வாழ்த்திப் பேசினார்.
இதில் அமைப்பின் மன்னார்குடி கிளைச் செயலர் எஸ். ராஜேந்திரன், ஆலோசகர் எஸ். பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.