திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்களமாருதி 32 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமன் ஜயந்தி விழா டிச. 15, 16, 17 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.
விழாவின் முதல் நாள்காலை 10.30 மணிக்கு மேல் ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனைகளும், 16-ஆம் தேதி கோதண்டராமருக்கு அபிஷேகமும், 17-ஆம் தேதி ஹனுமன் ஜயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனைகளும், அன்னதானமும் நடைபெறும்.