திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் பட்டா மாறுதல், புதியக்குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றம், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 205 பேர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
பின்னர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்களைச் சேர்ந்த 11 குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழை ஆட்சியர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ. தியாகராஜன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜம் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.