பேருந்து மோதி மெக்கானிக் சாவு

திருவாரூர் அருகே அரசுப் பேருந்து மோதி மெக்கானிக் உயிரிழந்தார்.

திருவாரூர் அருகே அரசுப் பேருந்து மோதி மெக்கானிக் உயிரிழந்தார்.
திருவாரூர் பழவனக்குடி மருதப்பட்டினத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (49). இருசக்கர வாகன மெக்கானிக். இவர், தனது நண்பர் கோபாலகிருஷ்ணனுடன் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் சென்றுகொண்டிருந்தார். திருத்துறைப்பூண்டி சாலை புலிவலம் பகுதியில் செல்லும்போது, அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில், நிகழ்விடத்திலேயே தண்டபாணி உயிரிழந்தார். படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, திருவாரூர் தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com