கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்டதைக் கண்டித்து, குடவாசலில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடவாசல் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கெரக்கோரியா தலைமை வகித்தார். கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது வெடிகுண்டு வீசி, தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி கண்டன உரையாற்றினார். இதில் கட்சியின் நிர்வாகிகள் கிருஸ்துதாஸ், லெட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.