திருவாரூர் எஸ்.பி. அலுவலகத்தில் காதல் தம்பதி தஞ்சம்

பெற்றோரால் தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாகக் கூறி, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் தம்பதியினர் செவ்வாய்க்கிழமை தஞ்சமடைந்தனர்.

பெற்றோரால் தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாகக் கூறி, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் தம்பதியினர் செவ்வாய்க்கிழமை தஞ்சமடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் சதீஷ். இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அகிலா சென்னையிலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். சதீஷ் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் அகிலாவின் உறவினர் வீடு இருந்துள்ளது. இவர்கள் இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சதீஷ் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டாராம்.
இவர்களது காதல் விவகாரம் அகிலாவின் பெற்றோருக்கு தெரியவந்து, வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதையறிந்த சதீஷ், கடந்த வாரம் விருதுநகர் சென்று அகிலாவை சந்தித்துள்ளார். அங்கிருந்து இருவரும் வெளியேறி கோயிலில் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த சதீஷும், அகிலாவும், தங்களது உயிருக்கு பெற்றோர்களால் ஆபத்து உள்ளதாகக் கூறி புகார் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com