இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சந்திப்புக் கூட்டம்

திருவாரூரில், இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சந்திப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில், இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சந்திப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பெட்ரோல் நிலையங்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தவிர, எதிர்காலத்தில் விற்பனையை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
நிகழ்ச்சியில், 2016- 17- ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல், ஆயில் அதிகளவில் விற்பனை செய்ததற்குப் பரிசுகளும், அதிக அளவில் ஆயில் விற்பனை செய்ததற்கு ஊக்கத் தொகைக்கான பரிசு கூப்பன்களும் வழங்கப்பட்டன.
விழாவில், திருவாரூர் சர்வோ ஸ்டாக்கிஸ்ட் உரிமையாளர் ஜெ. கனகராஜன், திருச்சி இந்தியன் ஆயில் முதுநிலை கோட்ட மேலாளர் பாபுநரேந்திரா, திருச்சி கோட்ட மேலாளர் ரமேஷ், திருச்சி சர்வோ ஆயில் முதுநிலை விற்பனை மேலாளர் சிவமூர்த்தி மற்றும் திருவாரூர், நாகை மாவட்ட விற்பனை அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com