திருவாரூர் அருகே கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாரிடமிருந்த குளம் மீட்கப்பட்டதையடுத்து, தூர்வாரும் பணியில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகேயுள்ள ஆனைதென்பாதி கிராமத்தில் உள்ள பொது குளத்தை தனியார் ஒருவர் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்தார். இதுகுறித்து கிராம மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு தனிநபரிடமிருந்து பொது குளத்தை மீட்டது. இதையடுத்து ஆனைதென்பாதி கிராம மக்கள், பொது குளத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டனர். கிராம மக்கள் 100 - க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளிக்கிழமை குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.