மன்னார்குடி தெப்பக்குளத்தில் தவறி விழுந்தவர் சாவு

மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் திங்கள்கிழமை தவறி விழுந்த ஐஸ் வியாபாரி உயிரிழந்தார்.

மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் திங்கள்கிழமை தவறி விழுந்த ஐஸ் வியாபாரி உயிரிழந்தார்.
அண்ணா நகரைச் சேர்ந்தவர் தே. ஜெபஆசீர்வாதம் (45). தள்ளுவண்டியில் ஐஸ் வியாபாரம் செய்து வந்த இவர், திங்கள்கிழமை இரவு வியாபாரம் முடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில், ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் குளிக்க இறங்கினார்.
அப்போது நிலைதடுமாறி தண்ணீரில் விழுந்து மூழ்கி இறந்தார். தகவல் அறிந்த மன்னார்குடி காவல் நிலைய போலீஸார், ஜெபஆசீர்வாதத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைககு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com