சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

உலக தண்ணீர் தினத்தையொட்டி திருவாரூரில் சுற்றுச்சூழல் விழிப்பு ணர்வு சைக்கிள் பயணம் புதன்கிழமை நடைபெற்றது.

உலக தண்ணீர் தினத்தையொட்டி திருவாரூரில் சுற்றுச்சூழல் விழிப்பு ணர்வு சைக்கிள் பயணம் புதன்கிழமை நடைபெற்றது.
தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் சமூக ஆர்வலர்கள் கலைமணி, ஹரிதாஸ் ஆகியோர் மிதிவண்டி பயணத்தைத் தொடங்கினர்.  திருவாரூர் தியாகராஜர் கோயில் மேற்கு கோபுரத்தில் தொடங்கிய இப்பயணம் மன்னார்குடி, தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக 3 நாள் பயணமாக மீண்டும் திருவாரூருக்கு வருகின்றனர்.
பயணநாளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தண்ணீர் சேமிப்பதன் அவசியத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாத்தல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பிளாஸ்டிக் தவிர்த்தல், நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com