திருவாரூர் அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்.
திருவாரூர் அருகே உள்ள பவித்திரமாணிக்கத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (60). இவர் மார்ச் 23-ஆம் தேதி சைக்கிளில் துர்காலயா சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே திருவாரூர் முடுக்கு தெருவைச் சேர்ந்த பரத்குமார் தனது சகோதரி தேன்மொழியை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தார். எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனமும் சைக்கிளும் மோதியதில் தேன்மொழி, பரத்குமார், ராஜமாணிக்கம் ஆகிய மூவரும் காயமடைந்தனர். பின்னர், அவர்கள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து திருவாரூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.