ஜேஆர்சி விழிப்புணர்வு பயிற்சி முகாம்

கொரடாச்சேரி அருகே ஜேஆர்சி விழிப்புணர்வு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொரடாச்சேரி அருகே ஜேஆர்சி விழிப்புணர்வு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட பள்ளி ஜேஆர்சி ஆலோசகர் மற்றும் மாணவர்களுக்கான முதலுதவி பயிற்சி முகாம் வெண்ணவாசல் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பார்வதி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், மாவட்ட ஜேஆர்சி கன்வீனர் செந்தில்குமார், மாநில பயிற்றுனர் செல்வராஜ், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் புருஷோத்தமன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொரடாச்சேரி ஆய்வாளர் ராஜகோபாலன் ஜேஆர்சி கொடியை ஏற்றிவைத்து, சாலை பாதுகாப்பு விதிகள் பற்றி பேசினார். மருத்துவர் நந்தகுமார் மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளித்தார். ஏற்பாடுகளை ஆணைவடபாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மரியதாஸ், வெண்ணவாசல் பள்ளி தலைமையாசிரியர் மகேஷ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com