வெல்டிங் பட்டறை உரிமையாளரை கத்தியால் குத்திய ஓட்டுநர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே முன்விரோதத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளரை கத்தியால் குத்திய ஓட்டுநர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

திருத்துறைப்பூண்டி அருகே முன்விரோதத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளரை கத்தியால் குத்திய ஓட்டுநர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
எடையூர் சங்கேந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் உலக.ராஜேந்திரன் (50). வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ராம்ஜிக்கும் முன்விரோதம் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், உலக.ராஜேந்திரன் மகன் பிரதீப்பிடம் ராம்ஜி சனிக்கிழமை தகராறு செய்தாராம். மேலும், உலக. ராஜேந்திரனை கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த உலக.ராஜேந்திரன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து எடையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஓட்டுநர் ராம்ஜியை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com