வடபாதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியை காணவில்லை என காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் திருநாட்டியத்தாங்குடியைச் சேர்ந்தவர் மனோகர் மகள் ரோஹிணி (17). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மே 16 ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் விடிந்ததும் காணவில்லையாம். இதுகுறித்து ரோஹிணியின் தந்தை மனோகர் வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் புதன்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதேபோல், கொரடாச்சேரி அருகே அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ராம்கி (28). இவர் நாகப்பட்டினத்தில் ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த மே 15 ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் புதன்கிழமை வரை வீட்டுக்கு திரும்பவில்லை. இதுகுறித்து ராம்கியின் தந்தை செல்வம் கொரடாச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.