மன்னார்குடி நகராட்சிக்கு சொந்தமான நல்லாங்குட்டையை தூய்மைப்படுத்தும் பணியில் 9-ஆவது வார்டு பொதுமக்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
மன்னார்குடி 9-ஆவது வார்டுக்குள்பட்ட கீழ இரண்டாம் தெருவில் உள்ளது நல்லாங்குட்டை. இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக விளங்கும் இக்குட்டை தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் வறண்டு காணப்படுகிறது.
இக்குட்டையில் செடி-கொடிகள் படர்ந்தும், பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளால் சுகாதாரமற்று காணப்பட்டது.
இதையடுத்து, 9-ஆவது வார்டு நகர் மன்ற முன்னாள் உறுப்பினர் ஆ. ஆனந்தராஜ், சமூக ஆர்வலர் கோ.வி. மீனாட்சிசுந்தரம் ஆகியோர் தலைமையில் இப்பகுதி பொதுமக்கள், இளைஞர் மன்றத்தினர் இந்த குட்டையை தூய்மைப்படுத்தினர்.