கொரடாச்சேரி அருகேயுள்ள இளங்காரக்குடியில் திமுக சார்பில் குளம் தூர்வாரும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரும்படி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினரைக் கேட்டுக்கொண்டதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக சார்பில் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் முசிறியம் ஊராட்சி இளங்காரக்குடியில் உள்ள 1.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் கலைவாணன் தலைமையில் தூர்வாரும் பணி நடைபெற்றது.
இப்பணியில் திமுகவினருடன் பொதுமக்களும் பங்கேற்றனர்.