அடிப்படை வசதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

திருவாரூரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு  கொண்டுவர வேண்டும். நகரத்துக்குள் மதுபானக் கடைகளை முழுவதுமாக அகற்ற வேண்டும். பேருந்து நிலையத்தில் சுகாதாரமற்ற நிலையில் உள்ள கழிவறைகளை முறையாக பராமாரிக்க வேண்டும். நீர்நிலைகளை முழுமையாகத் தூர்வார வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு நகரச் செயலர் ராமசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரெங்கசாமி, பழனிவேல், தமிழ்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com