ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருவாரூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருவாரூர் மாவட்டத்தில் அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், தொழிற்கல்வி பயிற்றுநர்கள் (வே ளாண்மை), பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
முதல்கட்டமாக, அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் கலந்தாய்வு திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 9 காலி பணியிடங்களுக்கு 26 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். ஆன்லைன் மூலம் நடைபெற்ற கலந்தாய்வை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் தெய்வபாஸ்கர் உடனிருந்தார். தொடர்ந்து, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை  நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com