காத்திருப்பு போராட்டம்

பொதுத் துறையில் தனியார்மயத்தை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, குடவாசலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுத் துறையில் தனியார்மயத்தை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, குடவாசலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடவாசல் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு குடவாசல் ஒன்றிய செயலாளர் கெரக்கொரியா தலைமை வகித்தார். போராட்டத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும். குடிநீர், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.  
இந்த போராட்டத்தில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி, நிர்வாகிகள் லெட்சுமணன், கிருஸ்துநாதன் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com