மன்னார்குடி அருகே பெட்டிக் கடை, காங்கிரஸ் கொடி கம்பம் ஆகியவற்றை சேதப்படுத்தியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெருகவாழ்ந்தான் கடை வீதியில் பாலசுப்பிரமணியம் என்பவரின் பெட்டிக் கடை உள்ளது. அங்கு போடப்பட்டிருந்த மேஜை. நாற்காலி, கடைக்கு அருகில் இருந்த காங்கிரஸ் கட்சியின் கொடிக்கம்பம் ஆகியவற்றை வியாழக்கிழமை இரவு யாரோ மர்ம நபர்கள் சேதப்படுத்திச் சென்றுவிட்டனர். இதுகுறித்து வர்த்தக சங்கத் தலைவர் பி.சந்திரசேகரன் அளித்த புகாரின் பேரில் பெருகவாழ்ந்தான் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.