திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மே 25-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மே மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 25-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அவர் செய்திக் குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.