பஸ் மோதி கார் டிரைவர் சாவு

முத்துப்பேட்டை அருகே தனியார் பஸ் மோதியதில் கார் டிரைவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

முத்துப்பேட்டை அருகே தனியார் பஸ் மோதியதில் கார் டிரைவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி வட்டம் கரையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரா.பழனிகுமார் (22). இவர் கார் ஓட்டுனராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 18-ம் தேதி இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பழனிகுமார் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதுதொடர்பாக முத்துப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com