மின் பராமரிப்புப் பணி காரணமாக, நீடாமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (மே 23) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நீடாமங்கலம் ஒன்றியம் கோயில்வெண்ணி, வடுவூர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதன்காரணமாக, வடுவூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் வடுவூர், தென்பாதி, சாத்தனூர், புதுக்கோட்டை, அடிச்சேரி, வடபாதி, கட்டக்குடி, புள்ளவராயன்குடிகாடு, எடமேலையூர், சீனிக்குடிகாடு, மூவர்க்கோட்டை, கொண்டையூர் நெய்வாசல் ஆகிய பகுதிகளிலும், கோயில்வெண்ணி துணை மின் நிலையத்திலிருந்து மின் வசதி பெறும் கோயில்வெண்ணி, நீடாமங்கலம், ரிஷியூர், ஆதனூர் மண்டபம், முன்னாவல்கோட்டை, அய்யம்பேட்டை, நத்தம், செட்டிசத்திரம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அருள்ராஜ் தெரிவித்துள்ளார்.